கர்ப்பிணி க்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் குறித்து தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்
இந்த விவகாரம் குறித்த நடவடிக்கை அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தமிழக அரசு ஜனவரி 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம் குறித்து அவசர வழக்காக ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. போதிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதால் அவசர வழக்காக ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.