கருத்து சுதந்திரம் குறித்து கனிமொழி-தமிழிசை கருத்து மோதல்

தூத்துகுடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் போட்டியிடும் நிலையில் இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருத்து சுதந்திரம் பற்றி கல்லூரி மாணவி சோபியாவிடம் தான் தமிழிசை கேட்க வேண்டும் என்று கனிமொழி சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: சாதிக்பாட்சா மரணம் பற்றிய விளம்பரம் செய்த அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியது திமுக. பெண்ணுரிமை பேசும் கனிமொழி இதற்கு பதில் கூறுவாரா? என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Leave a Reply