shadow

கருணாஸை காவலில் எடுக்க எழும்பூர் போலீசார் மனுதாக்கல்

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக திருப்புவனம் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என எழும்பூர் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே கருணாஸை அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்தால் அவரிடம் பல முக்கிய விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Leave a Reply