shadow

கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருடைய சமாதிக்கு இரவு முழுவதும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இன்று காலை முதல் பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் நடிகை த்ரிஷா கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவருடைய தாயார் உமாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்

ஏற்கனவே கருணாநிதி மறைந்த அன்று த்ரிஷா தனது டுவிட்டரில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply