கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் நேற்றே அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன்பின்னர் அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது..
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.