shadow

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவர்களுக்கு சற்றுமுன் உடல்நலம் இல்லாததால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

தயாளு அம்மாள் அவர்களுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து இன்னும் அப்பல்லோ மருத்துவமனை எந்தவித அறிக்கையையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply