கரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்வி உதயகுமார் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது ’கரிகால் சோழனுக்குப் பிறகு குடி மராமத்து பணிகளை செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சோழ மன்னன் கரிகாலனின் ஆட்சியில் குடி மராமத்து பணிகள் மிகச்சிறப்பாக நடந்ததாக வரலாறு கூறி வரும் நிலையில் கரிகால் சோழனுக்கு இணையாக குடிமராமத்து பணிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளனர்.

அமைச்சரின் இந்த பேச்சை அதிமுகவினர் ரசித்தாலும் நெட்டிசன்களும் பிற அரசியல் கட்சி தலைவர்களும் கிண்டலடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply