கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை:கே.எஸ்.அழகிரி

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் அதிரடியாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை தமிழக காங்கிரஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்த சஸ்பெண்ட் குறித்து கூறியபோது, ‘கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு, நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது

காங். ஆலோசனை கூட்டம் குறித்து மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டார்கள், நான் விளக்கம் கொடுத்து அதன் அடிப்படையிலேயே கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார்’ என்று கூறியுள்ளார்

Leave a Reply