கமல்ஹாசன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு:
சமீபத்தில் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்து தீவிரவாதம் இல்லை என்றும், இனியும் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்த கருத்து தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பனாரஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அவதூறு பரப்புதல், மதமோதலை தூண்டும் வகையில் கருத்து வெளியிடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கமல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.