முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் இந்திய அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுத்தவருமான கபில்தேவ் புதிய நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கபில்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்னும் தான் தற்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

கபில்தேவ் நலமாக இருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply