shadow

கன்னியாகுமரி சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் அவினாஷ், தீவிர ரஜினி ரசிகர். தான் வரைந்த ரஜினியின் ஓவியத்தை அவரிடம் காட்டி கையொப்பம் வாங்க அவினாஷ் ஆசைப்பட்டான். ஆனால் ரஜினியை சந்திப்பதற்கு முன் சிறுவன் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டான்.

இறப்புக்கு முன் அவனது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவனது பெற்றோரை ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார். சிறுவனின் ஆசைப்படி, அவன் வரைந்த ஓவியத்தில் கையொப்பம் இட்டு அவனுடைய பெற்றோரிடம் ரஜினிகாந்த் அளித்தார்.

இந்த சந்திப்பின் மூலம் தங்கள் மகன் ஆத்மா சாந்தியடையும் என நெகிழ்ச்சியுடன் அவினாஷின் பெற்றோர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், அவினாஷ், மூளைச்சாவு, ஆறுதல், ஓவியம்

Leave a Reply