கனமழை எதிரொலி: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக அவ்வபோது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்றும், கனமழை நீடிப்பதால் இன்று விடுமுறை விடப்படுவதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து இன்று நீலகிரி, ராமநாதபுரம் என இரண்டு மாவட்டங்களுக்கு தற்போதைய நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.