கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய்: கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி, மூன்றாவது அணிக்காக சந்திரசேகரராவ் உடன் சந்திப்பு ஆகியவைகளோடு பிரதமரிடமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியிருந்தார்.
பிரதமரிடம் ஸ்டாலின் பேசியதாக தமிழிசை கூறியது குறித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றில் கூறியபோது, ‘தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தவுடன் தமிழிசை எங்களை கடுமையாக சாடுகிறார்.
அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, தமிழிசை மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.