shadow

கட்சியில் இல்லாதவருக்கும் சீட் கொடுப்பேன்! கமல்ஹாசன்

வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற விபரீத முடிவை எடுத்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை பெற்று வருகிறது.

40 தொகுதிகளிலும் போட்டியிட ஆள் இருக்கின்றதா? என்று ஒருசில அரசியல் கட்சிகள் கேலி செய்து கொண்டிருக்கும் நிலையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் விருப்ப மனு அளிக்கலாம் என்றும், தேர்தல் சீட் கிடைத்த பின்னர் கட்சியில் இணைந்து போட்டியிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு கட்சியில் சேர்ந்து பல வருடங்கள் அக்கட்சிக்காக தொண்டு செய்தவர்களுக்கே சீட் கிடைக்காத நிலை மற்ற கட்சிகளிடம் இருந்து வரும் நிலையில் கட்சியில் இல்லாதவர்களுக்கும் சீட் கிடைக்கும் என்று கூறும் ஒரு அரசியல் கட்சியை மக்கள் புதுமையாக பார்த்து வருகின்றனர். இந்த புதுமையை மக்கள் ஓட்டு போடும்போதும் நினைத்து பார்த்தால் நிச்சயம் மாற்றம் வரும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது

Leave a Reply