கடைமடை பகுதிகளுக்கு வந்தது காவிரி நீர்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான கன அடி நீர் திறந்துவிடப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் காவிரி நீர் வந்து சேரவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் சமீபத்தில் கூறி வந்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்று கூறியது.
இந்த நிலையில் தேவநதி, முடிகொண்டான் ஆறு, வெட்டாறு தூர்வாரப்பட்டதால், நாகை, திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர். வந்துவிட்டதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே அப்பகுதி விவசாயிகள், விவசாய பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கிவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.