shadow

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இதன்படி தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply