கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை: நீதிமன்றம் அதிரடி
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடவேண்டும் என தென் கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களை பாட செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, இரு தரப்பினரும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என காஞ்சிபுரம் உதவி ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் யார் பெரியவர் என இரு தரப்பினரும் காட்டிக் கொள்வதாக சுட்டிக் காட்டியதோடு கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை எனக் கூறினார். இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி வடகலை வைணவர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் கோவில் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.