கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை?

தாய்லாந்து நாட்டில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அமெரிக்காவை சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த் சுப்ரானே தெப்பெட் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கோடீஸ்வரர்களாக இருந்து வந்த நிலையில் தாய்லாந்தின் புகெட் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் கான்கிரீட் வீடு ஒன்றை பெரும் பொருட்செலவில்கட்டியுள்ளனர்.

இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்துள்ளனர். கடலுக்குள் அனுமதி பெறாமல் வீடு கட்டியது, தாய்லாந்து இறையாண்மையை மீறியது ஆகிய குற்றங்களை செய்ததாக இந்த காதலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply