கடம்பூர் ராஜூவுக்கு ‘புத்தூர்க்கட்டு, மாவுக்கட்டு’ : ஆவேசமாக பேசிய விஜய் ரசிகர் கேட்ட மன்னிப்பு
விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு முதலில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து முதல்வர் தலையிட்டு கடைசி நேரத்தில் சிறப்புக்காட்சிக்க்கு அனுமதி அளிக்கப்பட்டது
இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் பிகில் வெளியான தேதியில் ‘ஒருவேளை சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு புத்தூர்கட்டு, மாவுக்கட்டு போட்டு வீட்டுக்கு அனுப்பியிருப்போம்’ என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் இதே விஜய் ரசிகர் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் ‘மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் குறித்து பேசிய கருத்து தவறானவை என்று உணர்கிறேன். அதற்காக வெட்கப்படுகிறேன். இந்த பேச்சுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
தான் பேசியது தவறு எனவும் தன் செயலுக்கு வெட்கப்படுகிறேன் என விஜய் ரசிகர் மன்னிப்பு கேட்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு மக்களே. //t.co/OOC9FKULDA pic.twitter.com/zVuNUhHvsH
— Prasath (@imprasath) October 30, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.