கஜா புயல் நிவாரண நிதி: ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய தொகை
கஜா புயல் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணி நடைபெற கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் இயக்குநர் ஷங்கர்
இதற்கு முன் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும், விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், விஜய் ரூ.45 லட்சமும், நடிகர் விஜய்வசந்த் ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.