shadow

கஜா புயல் நிவாரண நிதி: ரூ1 கோடி என திமுக அறிவிப்பு

கஜா புயல் நிவாரண நிதியாக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையிலும், மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கப்படுகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply