கஜா புயல்: நிவாரணத்திற்காக கொண்டு செல்லும் பொருட்களுக்கு லக்கேஜ் கிடையாது
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்குரிய பகுதிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது.
ஒருசிலர் வேன், லாரி மூலம் நிவாரண பொருட்களை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் பேருந்துகளிலும் ரயில்களிலும் நிவாரண பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு அரசு பேருந்துகளில் லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.