shadow

கஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழக கரையை நெருங்கிவிட்டது. இந்த கஜா புயல் தீவிரமடைந்து வருவதால், காரைக்காலில் சாயங்காலம் 5 மணிக்கு மேல் எல்லா கடைகள் மற்றும் நிறுவனங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் யாரும் பீச் பக்கம் வரவேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply