கஜா புயல் எதிரொலி: சட்டக்கல்லூரி தேர்வுகள் ரத்து
கஜா புயல் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்பட தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற இருந்த மதுரை காமராஜர் பல்கலை. தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
Leave a Reply
You must be logged in to post a comment.