shadow

கஜா புயலால் பலத்த சேதம்: 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

கஜா புயல் இன்று அதிகாலை பலத்த கோரத்தாண்டவத்துடன் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் சுமாஅர் 10 மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது. மின்சார கம்பங்களும் பல இடங்களில் சரிந்துள்ளதால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயலினால் ஏற்பட்ட சேதத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களிலும், புதுவையிலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், மதுரை, தஞ்சை, சேலம், சிவகங்கை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர் , தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளும், ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply