shadow

ஓரினச்சேர்க்கை உறவு குறித்து விஜய்சேதுபதி கருத்து

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்றும், அது இயற்கைக்கு மாறானது என்று கூற முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு பெரும்பாலானோர் அதிருப்தி தெரிவித்தாலும் பலர் பாராட்டியும் வருகின்றனர். கோலிவுட் திரையுலகில் கமல், குஷ்பு, த்ரிஷா உள்பட இந்த தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் விஜய்சேதுபதியும் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தன்பாலின சேர்க்கை என்பது தவறில்லை எனவும், அது உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்றும் கூறிய நடிகர் விஜய் சேதுபதி மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply