shadow

ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து

சமீபத்தில் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் இல்லை என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையில் ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம். ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டம் துணைபோகிறது. இந்த சட்டத்திற்கு மக்கள் சிலரும் துணையாக உள்ளனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி பாராட்டியுள்ள நிலையில் துரைமுருகன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply