shadow

ஓபிஎஸ் உள்பட 12 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கமா?

அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சமீபத்தில் சபாநாயகர் அறிவித்தார். இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 4ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் செய்த அதே தவறைத்தான் ஓபிஎஸ் அவர்களும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தனர் என்றும், அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்றும் தினகரன் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தேவை என திமுக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை திமுக கொறடா சக்கரபாணி தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது விரைவில் தெரியும

Leave a Reply