ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: பிரசவம் பார்த்தவர்கள் யார் தெரியுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி வந்ததை அடுத்து அதே ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த ராணுவ மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கர்ப்பிணிப் பெண் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்பட்ட நிலையில் அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இராணுவ மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது

இதனையடுத்து உடனடியாக அந்த மருத்துவர்கள் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய பதிவு இராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது இந்த பதிவிற்கு வாழ்த்துக்களும் கமண்டலம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply