shadow

ஒரே ஒரு யானையின் உயிரை காப்பாற்ற அணையை சில நிமிடங்கள் மூடிய கேரள அரசுகேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலசரிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் யானை ஒன்று தன்னந்தனியாக அணை திறந்துவிட்ட தண்ணீரில் சிக்கி கொண்டது. அந்த யானையை காப்பாற்ற கேரள அரசு 20 நிமிடங்கள் அணையை மூடியது. இதன் பின்னர் யானை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்ட பின்னர் மீண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இக்கட்டான நிலையில் எந்த உயிராக இருந்தாலும் அது காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply