shadow

ஒரு மாத சம்பளத்தை கேரளாவுக்கு தரும் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள்

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமின்றி லட்சக்கணக்கானோர் அத்தியாவசிய தேவைக்கே தவித்து வருகின்றனர்.

உணவு, உடை, பால் என அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தள்ளாடும் கேரள மக்களுக்கு நாடே முன்வந்து நிதியுதவி செய்து வருகின்றது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக தருவார்கள் என்றும், கேரளாவுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்ப குழு அமைக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இதேபோல் மற்ற கட்சியினர்களும் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply