ஒரு கோடி உறுப்பினர் இலக்கை அடைந்துவிட்டோம்: தினகரன் பெருமிதம்
கட்சி ஆரம்பித்த ஒருசில மாதங்களில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளதாக டிடிவி தினகரன் பெருமையாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒரு அணியாக இருந்த தினகரன் அணியின் டிடிவி தினகரன், அதன்பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்தார். அதிமுகவை கைப்பற்றுவதே தங்கள் லட்சியம் என்றாலும் அதுவரை தங்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தங்கள் கட்சியி, தற்போது ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைந்துவிட்டதாக சமீபத்தில் பேட்டியளித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.