shadow

ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் மாலியாவிற்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் மாலியா. இவர் நியூயார்க் நகரில் உள்ள மான்கேட்டன் என்ற கல்வி நிலையத்தில் படித்து வருகிறார். மாலியா தினந்தோறும் வகுப்புக்கு செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஜெயர் நில்டன் கார்டோசோ என்ற வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி தொல்லை கொடுத்து வந்ததாக புகார் கூறப்பட்டது.

முதலில் அந்த வாலிபரை கண்டுகொள்ளாத மாலியா, பின்னர் மீண்டும் மீண்டும் தொல்லைப்படுத்தியதால் உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கார்டோசோவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போதே வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து மாலியாவை பார்க்க முயற்சித்திருப்பதும் தெரியவந்தது.

Leave a Reply