shadow

ஒண்ணு போனா மூணு வந்திருச்சு: தினகரன் அணி உற்சாகம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக செயல்பட்டு வரும் டிடிவி தினகரன் அணியினர் இன்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்தனர். மூன்று எம்.எல்.ஏக்கள் மற்றும் ஏழு எம்பிக்களுடன் இன்று கவர்னரை சந்தித்த தினகரன், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் இன்று திடீரென தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினார். இதனால் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைந்தது.

ஆனால் ஜக்கையன் அணி மாறிய ஒருசில நிமிடங்களில் தினகரன் அணிக்கு கருணாஸ், கலைச்செல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கவர்னரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘இனியும் இந்த அரசு தொடர்ந்தால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சூழல் ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடாது எனவும், ஆளுநரிடம் ஏற்கனவே அளித்த கடிதம் தொடர்பாகவும் பேசியதாக கூறினார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறியதாக தெரிவித்தார்.

Leave a Reply