ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்களா? மத்திய அமைச்சர் கண்டிப்பு
சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்து பிரிவினை ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி நிர்வாகம் தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
சமீபத்தில் சென்னை ஐஐடி வளாகத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டும் என ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. இது சமூக இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மத்திய அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.