ஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன் என்று புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய் சவால் விட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், கொச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாதபடி ஐயப்ப பக்தர்கள் அவரை சிறை பிடித்தனர். ஐயப்ப பக்தர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வழிபடுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் பக்தி மார்க்கமாக செல்லாமால் வீம்புக்காக செல்பவர்களை உள்ளே விட அனுமதிக்க மாட்டோம் என்றும் ஐயப்ப பக்தர்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று சமூக ஆர்வலர் திருப்திதேசாய் பிரதமர் மோடிக்கும் முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.