ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் கேரளா செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்த கேரளாவில் உள்ள கொல்லம் நகருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் செல்கின்றனர். மேலும் விடுமுறைக்காக சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று 2ஆம் நாளாக ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இனி இதுபோல் மரணம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.