shadow

எம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்பிக்களுக்கும் ரணில் ஆதரவு எம்பிக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்றா வளாகத்தில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது. மோதல் அதிகமான நிலையில், சாபநாயகர், ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலாஇ ராஜபக்சே பேசியபோது கடும் அமளி ஏற்பட்டதில் ராஜபக்சே தரப்பு எம்.பி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் நான் அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகித்துள்ளேன், ஆகவே, பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதல்ல என்று இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியுள்ளார்.

Leave a Reply