எம்ஜிஆர் சிகிச்சை ஆவணங்கள் எங்கே? அப்பல்லோவுக்கு ஆறுமுகச்சாமி ஆணையம் உத்தரவு
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவு மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்ஜிஆர் மறைந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எம்ஜிஆரின் ஆவணங்களை ஆணையம் கேட்டு உத்தரைவிட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், கார் ஓட்டுநர்கள் என பல தரப்பினர்களையும் விசாரணை செய்து வருகிறது.+
இந்த நிலையில் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படயில் முடிவெடுக்கப்பட்டது என விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவை சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலேயே, எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படயில் முடிவெடுக்கப்பட்டது என விசாரணை ஆணையம் ஒப்புதல் கேள்வியை எழுப்பியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.