என் சம்பளம் முழுவதும் கட்சிக்கே! வைகோ அறிவிப்பு

ராஜ்யசபா எம்பி ஆவதால் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் கட்சியின் கணக்கில் வரவு வைக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி கர்ஜிப்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘ தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வரவு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தன்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு கட்சிக்காக உழைப்பேன் என்றும் கூறினார்.

Leave a Reply