பின்னைநின்று என்னே பிறவி பெருவது?
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே – திருமந்திரம்
மனிதர்கள் திரும்பத் திரும்ப பிறந்து வருவதால் என்ன பயனை தருகிறார்கள் இந்த உலகிற்கு. மகத்தான இந்த மனித பிறவியை எடுத்த மக்கள் முந்தி வந்து நன்கு முயன்று நல்ல தவம் செய்யாமல் இருக்கிறார்களே, தவம் செய்ய மக்களுக்கு வாய்க்கவில்லையே அது எனக்கு வாய்த்தது. நான் முயன்ற நல்ல தவத்தால் இறைவன் என்னை பயன்தரும் பிறவியாகப் படைத்தான். அவன் எனக்கு மெய்பொருள் அறிவை காட்டி, அவனை பற்றிய ஆகமப் பொருளை தமிழ் பொழியிலே எழுதுமாறு எனக்கு ஆனையிட்டு இந்த பிறவியை எனக்கு கொடுத்தான்.
Leave a Reply
You must be logged in to post a comment.