shadow

என்கவுண்டர் செய்வதற்காகவே தப்பிக்கவிடப்பட்டாரா தன்ஷ்வந்த்

சிறுமி ஹாசினி கொலை வழக்கிலும், பெற்ற தாயை கொலை செய்த வழக்கிலும் தேடப்பட்டு வந்த தஷ்வந்த், நேற்று முன் தினம் இரவு மும்பையில் பிடிபட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. பலத்த பாதுகாப்புடன் நேற்று அவரை சென்னைக்கு கொண்டு வர விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது திடீரென போலிசாரின் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் தஷ்வந்தை என்கவுண்டரில் போட்டுத்தள்ளவே வேண்டுமென்றே தப்பிக்க விட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போலிசார் தான் விளக்க வேண்டும்

இந்த நிலையில் தஷ்வந்தை பிடிக்க மாங்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை தஷ்வந்தை பிடிக்க மும்பை விரைகிறது.

Leave a Reply