எனது தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை: பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

வரும் பாராளுமன்ற தேர்தலையடுத்து பாஜகவின் தேசிய தலைமை நாடு முழுவதற்குமான தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிடும். இதனையடுத்து அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழக பாஜகவும் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடும்

இந்த நிலையில் தான் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதிக்கு என தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அந்த தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply