எனது தந்தை மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் அடைந்த மார்ட்டின் அலுவலகரின் மகன் புகார்

லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றிய நிலையில் மார்ட்டின் அலுவலக காசாளர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து அவரது மகன் ரோகின்குமார் கூறியபோது, ‘எனது தந்தை மரணத்தில் மார்ட்டின் நிறுவனத்தில் வேலை செய்யும் 2 பேர் மீது சந்தேகம் உள்ளது. எனது தந்தையை தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர்; அவரது முகத்தில் காயங்கள் இருந்தன

மேலும் வருமானவரித்துறையினர் விசாரணையின்போது எனது தந்தையை துன்புறுத்தியுள்ளனர் என புகார் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply