shadow

எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு பின்னடைவு: சர்வே முடிவுகள்

வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலி இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்பது குறித்த சர்வே முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த சர்வேயின்படி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி அமைத்தால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெறும் 24 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என இந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது

அதேபோல் உ.பி.யில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்தால் அந்த கூட்டணிக்கு 56 தொகுதிகள் கிடைக்கும் என தனியார் அமைப்பு ஒன்று சர்வே எடுத்துள்ளது.

Leave a Reply