சேரன் வெளியேற்றம்: கடுமையான வார்த்தைகளால் திட்டிய கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்சன் படலம் நடந்தபோது சேரன், லாஸ்லியா இருவரையும் பிக்பாஸ் ஒரு அறைக்கு வரச்சொல்லி பின்னர் சேரன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வாரம் ஷெரின் தான் குறைந்த வாக்குகள் பெற்றதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளிவந்த நிலையில் ஷெரின் முதலில் காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இனிவரும் டாஸ்குகள் கடுமையாக இருக்கும் என்பதால் சேரன் வெளியேற்றப்பட்டாரா? என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ஓட்டு போட்ட மக்கள் ஏமாளியாகிவிட்டதாகவும், ஆரவ், ஐஸ்வர்யா தத்தாவை கடைசி வரை காப்பாற்றியது போல் ஷெரினையும் கவினையும் பிக்பாஸ் கடைசி வரை காப்பாற்றி கொண்டு செல்வார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், ’இதுவொரு மோசடி ஷோ, ரொம்ப் ஏமாற்றமாக இருந்தது, எச்சே!!! என்று பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் பதிவுக்கு கண்டனங்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

Leave a Reply