ஊழல் நடந்ததா என்பதை டாஸ் போட்டு முடிவு செய்வோமா?
ரபேல் போர் விமானம் குறித்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து முடிவு செய்ய பூவா தலையா போட்டு பார்த்து கண்டுபிடிப்போமா? என மத்திய நிதி அமைச்சருக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் திரு ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது? என்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ? என்றும் ப.,சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.