உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எத்தனை கோடி?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் மோதும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 கோடி என்றும், கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.28 கோடியும் இரண்டாம்இடம் பெறும் அணிக்கு சுமார் ரூ.14 கோடியும் வழங்கப்பட இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும் அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். அதேபோல் லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சமும், லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சமும் வழங்கப்படும்

Leave a Reply