உன் மன்னிப்பை துணைவியாரிடம் சொல்: திமுக எம்.எல்.ஏ காட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மிசா விவகாரம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் அதிகரித்தன

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் ’ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின்போது போராட்டமோ ஆர்ப்பாட்டமோ செய்யாத ஸ்டாலின் எதற்காக கைதானார் என்று கேட்டேன்

மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்துவிட்டனர். ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்

அமைச்சர் பாண்டியராஜன் இந்த கருத்துக்கு திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது, ‘மிசா என்ற பெயரை சொல்ல உனக்கு தகுதி கிடையாது. நாலு கட்சி மாறி வந்த உனக்கு அரசியலில் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்ததே என்று வருத்தப்படுகிறேன். உன் மன்னிப்பை கொண்டுபோய் உன் துனைவியாரிடமே சொல். என்று கூறியுள்ளார்.

//twitter.com/JAnbazhagan/status/1194860218535989249

Leave a Reply