உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தினகரன் அதிரடி முடிவு
18 எம்எல்ஏக்கள் வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பில் சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் அணி முடிவு செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் தெரிவிக்கின்றது.
மதுரையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யபப்ட்டதாகவும், அதே நேரத்தில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தாலும் அதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தினகரன் அணியினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.